Monday, January 4, 2010

குறுகுறுங் கதைகள்!


இவை நான் முயற்சித்த சின்னஞ் சிறு கதைகள்.
இது  போன்ற புதிய முகம் கொண்ட கதைகளை தமிழுக்கு முதலில் அறிமுகப் படுத்தியவர் என் அறிவுக்கு எட்டிய வரை சுஜாதாதான். தமிழை இலக்கியம், செய்யுள் இது போன்ற முரடான நடைக்கு மட்டுமே உரித்தானது  என்ற பொதுவான அபிப்ராயம் பல நூற்றாண்டுகளாக பல முயற்சிகளால் உடைக்கப்பட்டு வந்திருகிறது. ‘மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தன்னை புதுப்பித்துக் கொள்ளும் மொழியே நீண்ட காலம் ஜீவித்திருக்கும்என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வாக்கு. அப்படிப்பட்ட ஒரு மொழியான தமிழில், அதன் புதிய பக்கங்களில், எனது மிகச சிறிய பதிப்பு.
******************************************************************************************
நான் உற்சாகமாக விமானத்திலிருந்து குதித்தேன். என் பாரஷூட் பட்டன் இயங்கவில்லை.

******************************************************************************************
ஒழுங்கு


எனக்கு ஒரு துப்பாக்கி வாங்க வேண்டும். எதற்கு என்று உங்களுக்கு தெரியுமாதலால் கேட்காதீர்கள். என் ஃபிரண்டு கோட்டு சொன்னான், பாய் கடைக்கு பக்கத்து சந்துல டாஸ்மாக் உள்ள புகுந்து வெளில வந்தா தெரியற முதல் மஞ்ச மண்டில, சலம்னு ஒரு ஆளு விக்கறான்னு. கோட்டு இதுல எல்லாம் பெரிய ஆளு. எங்கெங்க பங்கு கெடைக்குதுன்னு கூட சில சமயம் சொல்லுவான். அந்த மஞ்சள் கோடௌன் போய் அவன் பெயரையும் செல் நம்பரையும் சொன்னா அவனுக்கு கால் பண்ணி உறுதி படுத்திகிட்டு பொருள கொடுத்துடுவங்களாம். கொஞ்சம் செலவு ஆகும்னான். செலவை பத்தி என்ன கவலை....எனக்கு பணம் பெருசில்ல, காரியம் முடியணும். இன்னிக்கு எல்லாம் முடிஞ்சுடும். முடிஞ்சதும் ஒரு ரெண்டு மூணு நாள் வெளியூர் போயிட்டு வந்தா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு தோணிச்சு. பண்டிகையா இருக்கறதால யாரும் சந்தேக பட மாட்டங்க. அதுக்கு முன்னாடி காரியம் முக்கியம். அந்த எடத்துக்கு போனேன். மண்டி கதவை தட்டின உடனே என்னை அலேக்கா தூக்கிட்டு போய் பணம் வாங்கிட்டு பொருள கொடுத்தாங்க. ஒருத்தன் சொன்னான். அரசாங்க இயந்திரம் முன்ன மாதிரி இல்ல பிரதர்..கவனம்!”. இனிப்பு டப்பாவில் மறைத்து பூனை போல் வீட்டுக்கு வந்தேன். மணி பார்த்தேன். டுட்டு வரும் நேரம்தான். கதவு பின் மறைந்தேன். செய்தித் தாள் பிரித்து கடைசியில் இருந்து ஆரம்பித்தேன். முதல் பக்கத்தில் ஓரங்கட்டப்பட்ட செய்தி சொல்லியது, தீபாவளி அன்று துப்பாக்கியில் பட்டாசு வெடிக்க தடை! மீறுபவர்களுக்கு கடும் தண்டனை!. வாசலில் என் பையன் டுட்டு பெல் அடித்தான்.

******************************************************************************************

துப்பாக்கி வெடித்தது-ட்ட்டப்’. ஓட்டப் பந்தயம் தொடங்கியது. முதலாவதாய் வந்தான் அந்தப் பையன் கைகளால் தவழ்ந்து.
******************************************************************************************

No comments:

Post a Comment